Post

Share this post

’ஈரமான ரோஜாவே’ இயக்குநர் காலமானார்

பிரபல சின்னத்திரை இயக்குநர் தாய் செல்வம் நேற்று காலமானார்.
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவான ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ படத்தை இயக்கியவர் தாய் செல்வம்.
அதன்பின், சினிமாவில் ஈடுபடாமல் சின்னத்திரை இயக்குநரானார்.
‘மௌனராகம்’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடர்களை இயக்கி பிரபலமானவர் இறுதியாக, ‘ஈரமான ரோஜாவே 2’ தொடரை இயக்கி வந்தார்.
இந்நிலையில், அவர் நேற்று காலமானார்.
அவருடைய மறைவுக்கு நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a comment