Post

Share this post

வைரஸ் தொற்று : கையிருப்பில் போதிய மருந்துகள்!

இன்‘ஃ‘ப்ளூயன்ஸா – ஏ வகை வைரஸ் காய்ச்சல்களைத் தடுப்பதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் போதிய எண்ணிக்கையில் மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, வைரஸ் தொற்றுக்கு பயன்படுத்தப்படும் ஓசல்டாமிவிா் மாத்திரைகள் தமிழகத்தில் 3 லட்சம் கையிருப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆா்எஸ்வி வைரஸ் தொற்று, இன்‘ஃ‘ப்ளூயன்ஸா வைரஸ் தொற்று ஆகியவை தமிழகத்தில் அண்மைக்காலமாக வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் அவற்றுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான கட்டமைப்புகளும், வசதிகளும் உள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: பொதுவாக பருவ கால நோய்களுக்குத் தேவையான மருந்துகளும், மருத்துவப் பொருள்களும் தமிழகத்தில் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்னதாகவே டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களுக்கும், பிற வைரஸ் காய்ச்சல்களுக்கும் சிகிச்சையளிப்பதற்கான மாத்திரைகள் வாங்கப்பட்டன.
அந்த வகையில், ஓசல்டாமிவிா் மாத்திரைகள் 3 லட்சம் வாங்கப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கு வழங்கப்படும் பாராசிட்டமால் மாத்திரைகளும் தேவையான அளவு உள்ளன. இதைத் தவிர தொண்டை அடைப்பான், ரணஜன்னி, கக்குவான் இருமலுக்கான டிபிடி தடுப்பூசிகள், ஓஆா்எஸ் உப்பு-சா்க்கரை கரைசல், கிருமித் தொற்றுக்கான அசித்ரோமைசின் மாத்திரைகள் ஆகியவை அடுத்த மூன்று மாதங்களுக்குத் தேவையான அளவு இருப்பில் உள்ளன.
இதைத் தவிர, நீரில் உள்ள கிருமிகளை அழிப்பதற்கான குளோரின் மருந்தும் போதிய அளவில் உள்ளது. தமிழகத்தில் பருவ மாற்ற நோய்களைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மருந்து தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.

Recent Posts

Leave a comment