Post

Share this post

மாணவிக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய அதிபர்!

அத்தனகல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் பதினோராம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு தனது நிர்வாண புகைப்படங்களை வட்ஸ் அப் செயலி ஊடாக அனுப்பியதாக கூறப்படும் பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் இதனை தெரிவித்துள்ளது.
47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வாட்ஸ் அப் செயலி மூலம் மாணவியிடம் தனது நிர்வாணத்தை காட்டுவது மட்டுமின்றி, பள்ளி காலத்தில் அலுவலகத்திற்கு மாணவி வரவழைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாணவியின் தாயார் தனது கையடக்கத் தொலைபேசியில் நிர்வாணப் புகைப்படத்தைப் பார்த்ததாகவும், அது குறித்து தனது மகளிடம் கேட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் தாயும் மகளும் கம்பஹா காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு வந்து இது தொடர்பில் முறைப்பாடு செய்ததை அடுத்து அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recent Posts

Leave a comment