Post

Share this post

வௌிநாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!

வியட்நாம் கடற்பரப்பில் சட்டவிரோதமாக வேறு நாட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது படகு விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்ட இலங்கையர்களில் மற்றுமொரு குழுவினர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 19 ஆம் திகதி 23 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
2022 நவம்பரில், 303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற வியட்நாமியக் கொடியுடன் கூடிய பெரிய படகு வியட்நாம் கடற்பரப்பில் கவிழ்ந்தது.
வியட்நாமிய கடலோர பாதுகாப்பு படையினர் விபத்துக்கு உள்ளான குழுவை மீட்டு அவர்களில் 151 பேர் டிசம்பரில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

Leave a comment