Post

Share this post

துப்பாக்கிச்சூடு – சிறுவன் உள்பட 5 பேர் பலி

அமெரிக்காவில் வீடு புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 வயது சிறுவன் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான்ஜெசின்டோ நகரைச் சேர்ந்த 39 வயதான நபர் இரவு நேரத்தில் துப்பாக்கியால் சுட்டு விளையாடிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அவரது அண்டை வீட்டார் தூங்க முடியாமல் அவதியுற்றதால் அந்த நபரை அழைத்து கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் அண்டை வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் 8 வயது சிறுவன் உள்பட 5 பேர் பலியானார்கள். பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Leave a comment