Post

Share this post

குண்டு வெடிப்பு – இலங்கை படையினர் நால்வர் காயம்!

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையுடன் இணைந்து மாலியில் பணியாற்றிய நான்கு இலங்கை அமைதி காக்கும் படையினர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றின் காரணமாக காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களின் நிலைமை மோசமாக இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) மாலியின் கிடால் பகுதியில் உள்ள அவர்களது முகாமில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.
இவர்கள் மற்றுமொரு வாகனத் தொடரணிக்கு பாதுகாப்பு வழங்கி கவச வாகனத்தில் பயணித்த போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a comment