Post

Share this post

20 ​ஆணுறைகளுடன் சிக்கிய 2 பெண்கள்

பாணந்துறை பிரதேசத்தில் 20 ​ஆணுறைகளுடன் 2 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை, வாழைத்தோட்டம் பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில், நடத்திச் செல்லப்பட்ட விபசார விடுதியை சுற்றி​வளைத்த போதே பெண்கள் இருவர் உட்பட் நால்வரை கைது செய்துள்ளனர்.
நிலையத்தின் உரிமையாளர், வைத்தியர் எனக் கூறப்படும் நபர், விபசாரத்தில் ஈடுபடுவதற்கு தயாராக இருந்த பெண்கள் இருவர் ஆகியோரே கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்கள் இருவரும் அகலவத்த மற்றும் பண்டாரகம பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என்றும், அவர்களின் கைப்பைகளை சோதனைக்கு உட்படுத்திய போது, ​​அந்த பைகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஆணுறைகள் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரே இந்த ஆயுர்வேத மசாஜ் நிலையம் திறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு மணிநேரத்துக்கு 2,000 ரூபாய்க்கு பெண்ணொருவரை விலைக்கு பெற்றுக்கொள்வதாக கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, நால்வரும் கைது செய்யப்பட்டதாக மேலும் தெரிவிக்கபப்டுகின்றது.

Leave a comment