Post

Share this post

வௌிநாடு சென்ற இரண்டு இலங்கை பெண்கள் பலி!

அபுதாபியின் பனியாஸ் நகரில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவருடன் தீயில் சிக்கிய மேலும் ஐந்து பேரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர்காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் பணிக்காக அபுதாபி சென்ற இளம் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, மலேசியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணிபுரிந்த இலங்கைப் பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மலேசியாவிலுள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

42 வயதுடைய திருமணமான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

Leave a comment