Post

Share this post

மது அருந்திவிட்டு பாடசாலை வந்த மாணவி குறித்து விசாரணை!

மாணவி ஒருவர் மது அருந்திவிட்டு பாடசாலைக்கு சமூகமளித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கெக்கிராவ நீதவான் பொலிஸாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அத்துடன், மாணவி தொடர்பில் சட்ட வைத்திய நிபுணரின் பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அண்மையில் மது அருந்திவிட்டு பாடசாலைக்கு சமூகமளித்த 14 வயது மாணவி தொடர்பில் கெக்கிராவை பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
குறித்த மாணவி கல்வி கற்கும் பாடசாலைக்கு முன்பதாக போக்குவரத்து கடமையில் ஈடுக்கப்பட்டிருந்த பொலிஸார் மாணவி மது அருந்திவிட்டு பாடசாலைக்கு சமூகமளிப்பதை கண்டறிந்துள்ளனர்.
பொலிஸாரின் தற்போதைய விசாரணையில் மாணவியின் தாயின் இரண்டாவது கணவரின் தந்தையே இவ்வாறு மது அருந்துவதற்கு பழக்கப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

Leave a comment