ம.மா/நு/நல்லிளைப்பாற்றி மகளீர் பாடசாலையின் 2023 ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்ற தேர்தல் ‘ஒரு விரல் புரட்சி கன்னியர்களின் எழுச்சி’ என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு அண்மையில் நடைப்பெற்றது.
இந்த தேர்தலில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டதுடன் வேட்பாளர்களுக்கு கணிசமான வாக்குகளையும் வழங்கி இருந்தனர்.
கடந்த 6 ஆம் திகதி 12 மணி அளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மாலை 2 மணி அளவில் வெற்றிப்பெற்ற கட்சிகளின் பெயர்களும் வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளும் பாடசாலை தேர்தல் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டது.