கிழக்கு பிலிப்பைன்ஸின் மிண்டானோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது நேற்று (17) பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளதாக பிலிப்பைன்ஸ் நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையெனவும் கூறியுள்ளது.