கடன் தொகை தள்ளுபடி தொடர்பிலான அறிவிப்பு ஒன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் பாராளுமன்றில் வைத்து வழங்கியுள்ளார்.
அதன்படி இரண்டு ஹெக்டேயருக்கு குறைவான நிலப்பரப்பை கொண்ட நெற்செய்கையாளர்கள் பெற்றுள்ள கடன் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு பிரதமர் குறைநிரப்பு பிரேரணையை பாராளுமன்றில் இன்றைய தினம் முன்வைத்துள்ளார்.
695 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை இவ்வாறு பிரதமரால் முன்வைக்கப்பட்டிருந்தது.
இதன்போதே குறித்த கடன் தொகை தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.