குழந்தை மீது டிவி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!

இந்திய மாநிலம் கேரளாவில் ஒன்றரை வயது குழந்தை மீது டிவி விழுந்ததில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் (24.06.2024 அன்று 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில்,கொச்சின் துறைமுக நகருக்கு அருகில் உள்ள மூவாட்டுப்புழாவில் வசித்து வருபவர் அனாஸ் என்பவரின் அப்துல் சமத் என்ற ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை மீது டிவியானது அதன் மேசையுடன் விழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து, படுகாயமடைந்த குழந்தை உடனடியாக அப்துல் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
மேலும், டிவி வைக்கப்பட்டிருந்த மேசையை குழந்தை தொட்டதால் மேலே விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.