மதுவரி திணைக்கள வருமானம் அதிகரிப்பு!

இலங்கை மதுவரி திணைக்களத்தின் வருமானம் அதிகரித்துள்ளதாக மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் எம்.ஜே. குணசிறி குறிப்பிட்டுள்ளார்.
இதனூடாக நாட்டிற்கு பல பில்லியன் ரூபாய் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 105 பில்லியன் ரூபாய் வருமானத்தை
இலங்கை மதுவரி திணைக்களம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 17 பில்லியன் ரூபாய் அதிகரிப்பாகும் என எம்.ஜே.குணசிறி கூறியுள்ளார்.