கனடாவில் 13 இடங்களில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவங்களில் 10 பேர் பலியானார்கள்.
கனடாவின் மத்திய மாகாணமான சாஸ்கட்சிவானில் இன்று 13 இடங்களில் கத்திக்குத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த சம்பவங்களில் 10 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சந்தேகத்திற்குரிய 2 பேரை தேடி வருகின்றனர். கனடாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவங்கள் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே சாஸ்கட்சிவானில் நடந்த தாக்குதல்கள் கொடூரமானவை என்றும இது இதயத்தை உடைப்பவை என்றும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.