Post

Share this post

பாவம் அனுஷ்கா!

பொன்னியின் செல்வன் பற்றிப் பேசுவோர் எல்லாமும் கூடவே பேசும் இன்னொரு படம், அல்ல, படங்கள் – பாகுபலி 1, 2!
அந்தப் படங்களில்தான் என்ன லெவலில் கலக்கியிருப்பார் நடிகை அனுஷ்கா? ஒரு பக்கம் தமன்னா என்றால் இன்னொரு பக்கம் அனுஷ்கா.
அதுவும் பிரபாஸுடன் சேர்ந்து செய்யும் ஒரு சண்டையின்போது அம்பு எய்வார்களே இருவருமாக இணைந்து ஒரே திசையில், ம், காணக் கொடுத்துவைத்திருக்க வேண்டும், அந்த போஸ்!
அது சரி, பாகுபலியாவது பரவாயில்லை, பொன்னியின் செல்வனுடன் ஒப்பிட வேண்டியிருக்கலாம். இப்போது திடீரென அனுஷ்கா பற்றிப் பேச என்ன வந்தது?
அதுதான் துயரமே.
ஊரே எதை எதையோ பேசிக்கொண்டும் இன்ஸ்டாவில் பதிவேற்றிக் கொண்டும் டிவிட்டிக்கொண்டும் இருக்க, பாவம் அனுஷ்காவோ, எலும்பு மாதிரியைக் கௌவிக் கொண்டிருந்து கைவிடும் தன் நாயைச் சொறிந்துகொடுப்பதுபோல ஒரு குறு விடியோவைப் பதிவேற்றியிருக்கிறார், இன்ஸ்டாகிராமில்.
அவருடைய ரசிகர்களோ, அதையும் பதினாறு மணி நேரத்தில் கிட்டத்தட்ட நெருக்கி, ஒரு லட்சம் பேர் லைக் செய்திருக்கிறார்கள். வாங்க, மீண்டும் வாங்க என்றெல்லாம் வரவேற்கும் காமென்ட்ஸ்கள்.
அவ்வளவுதானா அவருடைய ஆக்டிவிடீஸ்? இல்லை, செப். 18-ல் தன் ப்ரபைல் படத்தை மாற்றியிருக்கிறார். செப். 11 – கிருஷ்ணம் ராஜு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி, சுதந்திர தினத்துக்கெல்லாம் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
லைகர், சீதா ராமம் படங்களுக்கெல்லாமும்கூட வாழ்த்துத் தெரிவித்துள்ளார் அனுஷ்கா. பதிலுக்கு சீதாராமம் நாயகி மிருணாள் தாக்குர் நன்றி கூறியிருக்கிறார்.
இதற்காகத்தான் காற்றுள்ளபோதே தூற்றிக் கொண்டு செட்டிலாகிவிட வேண்டும் என்பார்களோ.
எப்படியோ, அந்த அழகி அனுஷ்கா மீண்டும் வருவாரா? பார்க்க முடியுமா?

Leave a comment