Post

Share this post

பிக்பாஸில் இருந்து 2 பேர் வௌியேற்றம்!

பிக்பாஸில் கடந்த வாரம் கமல் ஹாசன் போகும் போதே இந்த வாரம் இரண்டு எவிக்‌ஷன் இருக்கின்றது என போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நிலையில் வெளியேறப்போகும் இரு போட்டியாளர்கள் யார் என ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.
இவ்வாறான நிலையில், கருத்துக் கணிப்புகளின் படி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு அதிரடியாக வெளியேறப்போகும் அந்த 2 பேர் யார் யார் என்பது பற்றி பார்ப்போம்..
கடந்த இரண்டு வாரங்களை போல இந்த வாரம் ஓப்பன் நாமினேஷன் வைக்காமல் கன்ஃபெஷன் ரூமில் நாமினேட் செய்யும் படி பிக்பாஸ் தெரிவித்தார்.
ஆனால், அப்போதும் விக்ரமன், ஷிவின் பெயர் எல்லாம் நாமினேஷன் பட்டியலில் இடம்பெறவில்லை. வழக்கம் போல அசீம், ஆயிஷா, கதிர், ஜனனி, ராம் மற்றும் ஏடிகே இந்த முறை நாமினேட் ஆகி உள்ளார்கள்.
மேலும், கேப்டன் பதவி பெற்று மணிகண்டன் நாமினேஷனில் இடம்பெறவில்லை. விக்ரமன், ஷிவின், ரச்சிதா, மைனா நந்தினி, அமுதவாணன், தனலட்சுமி உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேஷனை சந்திக்காமல் ஜாலியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வருகின்றனர்.
அத்தோடு நாமினேட் ஆன நபர்கள் எப்படியாவது சிறப்பாக விளையாட வேண்டுமென முதல்வன் ரகுவரன் கெட்டப் எல்லாம் போட்டுக் கொண்டு பேச முயற்சி செய்து வருகின்றனர்.
வார வாரம் எப்படியாவது அசீம் அட்ராசிட்டி பண்ணுகிறார் என அவரை நாமினேட் செய்து அனுப்பி விடலாம் என நினைத்து வரும் போட்டியாளர்களுக்கு செம பல்பு கொடுத்து அதிக வாக்குகளுடன் முதல் இடத்திலேயே காப்பாற்றப்பட்டு வருகிறார் அசீம்.
மேலும் இந்த வாரம் இரண்டு எவிக்‌ஷனை கமல் அறிவிக்க காரணம் கூட எப்படியாவது அசீமை சேர்த்து அனுப்புங்க என்பதை மறைமுகமாக சொல்வது போலத்தான் இருந்தது என்றும் நெட்டிசன்கள் கருத்துக்களை கூறிவருகின்றனர்.
அமைதியாக எந்தவொரு வம்பு தும்புக்கும் போகாமல் விளையாடி வரும் கதிரவனையும் தொடர்ந்து போட்டியாளர்கள் வெளியேற்ற முயற்சி செய்து வருகின்றனர்.
நாமினேஷனில் இடம்பெற்ற உடனே மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் பிரபுதேவா பாட்டுக்கு ஆட்டம் போட்டு தனக்கு இருக்கும் திறமையை வெளிக்காட்டி ஓட்டுக்களை அள்ளி குவித்துவிட்டார். இந்த வாரம் அசீம் முதலில் காப்பாற்றப்படுவாரா? கதிர் காப்பாற்றப்படுவாரா? என்பதை காண ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
குயின்ஸியை தொடர்ந்து ஜனனியையும் எப்படியாவது வெளியே பார்சல் செய்து விடலாமென சக போட்டியாளர்கள் நினைத்து நமினேட் செய்துள்ளனர்.
ஆனால், அவரது ஜனனி ஆர்மியினர் எப்படியும் அவரை வெளியே போக விடமாட்டோம் வாக்குகளை போட்டு வருகின்றனர்.
மேலும் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கி உள்ள ஏடிகே, ஆயிஷா மற்றும் ராம் மூன்று பேரும் டேஞ்சர் ஜோனில் உள்ளனர்.
மேலும் இதில், ஆயிஷா மற்றும் ராமை விட சற்றே அதிக ஓட்டுக்களை அள்ளி ஏடிகே முன்னிலையில் உள்ளார். ஆனால், வார இறுதியில் என்ன ஆகும் என்பது தெரியவில்லை.
இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் என கமல் அறிவித்துள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆயிஷா மற்றும் ராம் வெளியேறும் நிலையில், குறைவான வாக்குகளுடன் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மேலும் ஒரு ஆண் போட்டியாளர், ஒரு பெண் போட்டியாளர் வெளியேற வேண்டும் என்றாலும் இந்த ஜோடி சரியாக உள்ளது. ஆயிஷாவுக்கு ஓட்டு கிடைத்தால் ஏடிகே சிக்குவார் என கூறப்படுகின்றது.

Leave a comment