சைக்கிள் திருடும் வயோதிபர் – உதவி கோரும் பொலிஸார்!
யாழ்ப்பாணம் – நெல்லியடி, தெல்லிப்பழை என பல இடங்களில் முதியவர் ஒருவர் துவிச்சக்கர வண்டி திருட்டில் அண்மை காலமாக ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நேற்று (22) தெல்லிப்பழை பகுதியில் ஒரு துவிச்சக்கர வண்டியை அந்த முதியவர் திருடிச் செல்வது சிசிடிவி கமராவில் பதிவாகி உள்ளது.
எனவே குறித்த முதியவரை தெரிந்தவர்கள் 0723 475566 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் வழங்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.