OOSAI RADIO

Post

Share this post

தாயை பலாத்காரம் செய்வேன் – பொலிஸ் அதிகாரி! (வீடியோ)

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் அல் – குத்ஸில் குவிந்த சுமார் 1,30,000 போராட்டக்காரர்கள் நாட்டில் புதிதாக தேர்தல் நடத்த வலியுறுத்தியும், காசாவில் பிணைகக் கைதிகளாக மீதமுள்ள 100 இஸ்ரேலியர்களை விரைவில் மீட்க கோரியும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க இஸ்ரேல் பொலிஸார் கடுமையான முறைகளை பிரயோகித்தது சர்ச்சையாகியுள்ளது.

இந்த நிலையில் பாரிஸ் சதுக்கத்தில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இல்லத்தின் அருகே திரண்ட போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டத்தொடங்கினர்.

அப்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் போராட்டக்காரிடம் மிகவும் கீழ்த்தரமான வகையில், ‘ நான் உன் தாயை பலாத்காரம் செய்வேன்’ என்று மிரட்டியுள்ளார்.

போராட்டக்காரர்கள் சிலரை பொலிஸ் கும்பல் ஆக்ரோஷமாக கையாளும் சமபாவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்று போராட்டம் நடந்த இடங்களில் எல்லாம் பொலிஸில் கடுமையான அணுகுமுறையை இஸ்ரேல் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளது.

Leave a comment

Type and hit enter