சம்பள உயர்வு தொடர்பில் அதிரடி அறிவிப்பு!
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் கோரும் சம்பள உயர்வை அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாது என திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்கள் கோரும் சம்பள உயர்வை வழங்கினால், தற்போதுள்ள 18% வட் வரியை 20% முதல் 21% வரை உயர்த்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரச சேவை தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதி ரணில் தலைமையில் நேற்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது என்பதுடன், அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளைக் கருத்திற்கொண்டு 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை மீளாய்வு செய்ய எதிர்பார்க்கப்படுவதாக, அரச சேவை தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.