OOSAI RADIO

Post

Share this post

விழுந்து உயிரிழந்த மாணவர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்!

கொழும்பில் உள்ள குடியிருப்பின் 67ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவர்களின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்த மாணவனின் தந்தை சட்டத்தரணி மூலமாக கோட்டை நீதவானுக்கு அறிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் போது தனிப்பட்ட முறைப்பாடு செய்வதற்கு அனுமதி மறுத்துள்ள நீதவான் தேவையேற்பட்டால் அது தொடர்பில் கொம்பெனித்தெரு பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு சட்டத்தரணியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் தனது கட்சிக்காரரின் மகன் உயிரிழந்ததாலேயே அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தனிப்பட்ட முறைப்பாடு செய்வதற்கு தமது கட்சிக்காரருக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு சட்டத்தரணி அசங்க தயாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கொம்பெனித் தெரு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter