OOSAI RADIO

Post

Share this post

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி!

கொழும்பு கல்கிசையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றிலிருந்து நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரும் அடகிரிய, தெலம்புகல்ல, இரத்மலானை மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26, 33, 34 மற்றும் 37 வயதுடைய நான்கு பெண்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment

Type and hit enter