OOSAI RADIO

Post

Share this post

இரு நாட்கள் மதுபான சாலைகளுக்கு பூட்டு!

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு செப்டம்பர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும், மூன்று நட்சத்திர வகுப்பு வரம்பிற்கு அப்பால் உள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் சொகுசு விடுதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கலால் கட்டளைச் சட்டத்தை மீறும் சந்தர்ப்பங்கள் தொடர்பில் கலால் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1913, பொதுமக்கள் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கலால் திணைக்கள அவசர தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என்று கலால் திணைக்களத்தின் பேச்சாளர் சன்ன வீரக்கொடி தெரிவித்தார்.

Leave a comment

Type and hit enter