OOSAI RADIO

Post

Share this post

அரசியலில் ஓய்வு என்ற சொல்லை அறிமுகம் செய்த அரசாங்கம்!

இலங்கை அரசியலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் ‘ஓய்வு’ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்த முடிந்துள்ளது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தேர்தலில் தோல்வியடைந்த அரசியல்வாதிகள் யாரும் ஓய்வு பெறவில்லை. இறந்த பின்னரே ஓய்வு என்ற நிலை இருந்ததாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுத்தேர்தலில் போட்டியிடும், தமது கட்சி வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இவ்வாறான சூழல்களே புரட்சிகள் எனப்படும் என்றும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இம்முறை தேர்தல் பிரசாரத்தில் இருந்து ஒதுங்கி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவே என்று கூறிய அவர் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சி முகாமினால் சுமத்தப்பட்ட தவறான மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை 21 நாட்கள் முடிவதற்கு முன்னரே, தமது அரசாங்கத்தினால் நிரூபிக்க முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது, எதிர்க்கட்சி முகாமில் பொதுத் தேர்தலுக்கான கோஷங்கள் ஏதும் இல்லாமல் போய்விட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி முகாம் தங்களுக்கு எதிராக தவறான விமர்சனங்களைச் செய்தது. தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்குப் பிறகு மோதல்கள் ஏற்படும் என்றும் எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசைகள் இருக்கும் என்றும் சொன்னார்கள்.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறையும், இலங்கை தனிமைப்படுத்தப்பட்ட நாடாகும் என்றும் கூறினார்கள்.

ஆனால் இந்த விமர்சனங்கள் அனைத்தும் 21 நாட்களுக்குள் அவர்கள் கண் முன்னே சிதைந்துவிட்டன என்று அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியலில் ஓய்வு என்ற சொல்லை அறிமுகம் செய்த அரசாங்கம்!

இலங்கை அரசியலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் ‘ஓய்வு’ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்த முடிந்துள்ளது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தேர்தலில் தோல்வியடைந்த அரசியல்வாதிகள் யாரும் ஓய்வு பெறவில்லை. இறந்த பின்னரே ஓய்வு என்ற நிலை இருந்ததாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுத்தேர்தலில் போட்டியிடும், தமது கட்சி வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இவ்வாறான சூழல்களே புரட்சிகள் எனப்படும் என்றும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இம்முறை தேர்தல் பிரசாரத்தில் இருந்து ஒதுங்கி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவே என்று கூறிய அவர் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சி முகாமினால் சுமத்தப்பட்ட தவறான மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை 21 நாட்கள் முடிவதற்கு முன்னரே, தமது அரசாங்கத்தினால் நிரூபிக்க முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது, எதிர்க்கட்சி முகாமில் பொதுத் தேர்தலுக்கான கோஷங்கள் ஏதும் இல்லாமல் போய்விட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி முகாம் தங்களுக்கு எதிராக தவறான விமர்சனங்களைச் செய்தது. தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்குப் பிறகு மோதல்கள் ஏற்படும் என்றும் எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசைகள் இருக்கும் என்றும் சொன்னார்கள்.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறையும், இலங்கை தனிமைப்படுத்தப்பட்ட நாடாகும் என்றும் கூறினார்கள்.

ஆனால் இந்த விமர்சனங்கள் அனைத்தும் 21 நாட்களுக்குள் அவர்கள் கண் முன்னே சிதைந்துவிட்டன என்று அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter