ஆணுடன் மதுபோதையில் விபத்தில் சிக்கிய எதிர்நீச்சல் நடிகை கைது!
கன்னட சீரியலில் அறிமுகமான மதுமிதாவுக்கு அங்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.. அதன் பின் இவர் நடித்த தெலுங்கு சீரியல் ஒன்று நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது மதுமிதா ஆண் நண்பருடன் மது போதையில், அதுவும் ராங் ரூட்டில் சென்று எதிரே வந்த காவல்துறை வண்டியில் மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளனர். அந்த இடத்திற்கு வந்த போலீசார், உடனே அடிபட்ட போலீசை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து மதுமிதாவும் அவரது நண்பரும் எங்கள் மீது தப்பில்லை. போலிஸ்காரர் தான் வேகமாக வந்து காரில் மோதினார் என்று வாக்குவாதம் செய்தனர். இருவரையும் போலிஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிச்சென்று காரை பறிமுதல் செய்து விசாரித்தனர்.
புது கார் வாங்கி மதுமிதா விபத்தில் சிக்கி பிரச்சனையில் மாட்டிய நிலையில், நான் கார் ஓட்டவில்லை, நண்பர் தான் ஓட்டினார். என் ஃபிரண்ட் மீதுதான் தப்பு, சின்ன விபத்து தான், அதை பத்தி பெருசா பேச எதுவும் இல்லை என்று சமாளித்து பேசியிருக்கிறார் நடிகை மதுமிதா. இந்த விவகாரம் தற்போது சின்னத்திரையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.