OOSAI RADIO

Post

Share this post

இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் குறைந்த விலையில்…

குறைந்த விலையில் பொருட்களை இறக்குமதி செய்து அதிக விலைக்கு விற்கும் அல்லது இருக்கும் பொருட்களை அதிக விலைக்கு விற்க விலை நிர்ணயம் செய்யும் மாபெரும் மாபியா இந்த நாட்டில் இயங்கி வருவதாக வர்த்தக மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எஸ். வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், அப்பணியில் ஈடுபடும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அதிகப் பொறுப்பு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

சுமார் 03 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுறவு வலையமைப்பின் ஊடாக பொருட்களை விநியோகிக்கும் போது நேரடியாக பொருட்களை இறக்குமதி செய்து குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்ய முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Type and hit enter