OOSAI RADIO

Post

Share this post

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி!

கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரஜமாவத்தை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றிலிருந்து இரண்டு பெண்கள் கைதாகியுள்ளனர்.

நேற்று (02) மாலை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிசை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மசாஜ் நிலையத்தின் உரிமையாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பரகடுவை மற்றும் கொச்சிக்கடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 46 மற்றும் 55 வயதுடைய இரண்டு பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment

Type and hit enter