OOSAI RADIO

Post

Share this post

விவாகரத்தில் முடிந்த சங்கர் மகள் திருமணம்!

தமிழ் சினிமாவில் டாப் இயக்குனராகவும் பிரம்மாண்ட இயக்குனராகவும் திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கர் தற்போது இந்தியன் 2, கேம் ஜேன்சர் படங்களை பிஸியாக இருக்கி வருகிறார். இதற்கிடையில் தன்னுடைய இரு மகளின் வாழ்க்கை பற்றியும் யோசித்து சில விசயங்களை செய்து வருகிறார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மகள் ஐஸ்வர்யா சங்கரை, ரோஹித் என்ற கிரிக்கெட் பயிற்சியாளருக்கு கரம்பிடித்து கொடுத்திருந்தார். திருமணமாகிய சில மாதங்களில் சங்கர் மருமகன் ரோஹித், பாலியல் வழக்கில் போக்சோவில் சிக்கி கைது செய்யப்பட்டார். இதனால் சங்கர் மகள் ஐஸ்வர்யாவின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்று நினைத்து வருத்தப்பட்டு வந்தார்.

முறையாக முதல் கணவரை விவாகரத்து பெற்ற மகள் ஐஸ்வர்யாவுக்கும், தருண் கார்த்திகேயனுக்கும் இரண்டாம் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்திருந்தார் சங்கர். அப்படி சில வாரங்களுக்கு முன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது.

தற்போது ஏப்ரல் 15 ஆம் தேதி சென்னையில் ஐஸ்வர்யா சங்கருக்கும் – தருண் கார்த்திகேயனுக்கும் திருமணம் முடிந்துள்ளது. திருமணத்திற்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கிறார். திருமணத்தில் எடுத்த குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a comment

Type and hit enter