OOSAI RADIO

Post

Share this post

டிரம்ப் மீது துப்பாக்கீச்சூடு நடத்திய இளைஞன்!

அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது துப்பாக்கிசூடு நடந்த சம்பவம் பெரும் அதிர்வலை யை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப் மீது துப்பாக்கிசூடு நடத்திய தாமஸ் மாத்தியூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர் சீக்ரட் சர்வீஸ் பாதுகாவலர்கள் சுட்டு கொன்றுள்ளனர்.

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞன் பற்றிய அடுத்தடுத்த தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

மேத்யூ மிகவும் தனிமையான அமைதியான சமூகத் தொடர்பு இல்லாத பையன் என்று அவனது சக மாணவர்கள் கூறுகின்றனர்.

எனவே மேத்யூவுக்கு நண்பர்களும் இல்லை. துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் சரியாக குறிவைக்கும் திறன் இல்லாததால் மேத்யூ நிராகரிக்கப்பட்டுள்ளான்.

அவனது தோற்றத்தை வைத்து சக மாணவர்கள் தொடர்ந்து கேலி கிண்டல் செய்து வம்பிழுத்து வந்துள்ளனர்.

அவன் அணியும் உடைகளை வைத்தும் அவனை அவர்கள் தொடர்ந்து சீண்டியுள்ளனர். தனது தந்தையின் AR ஸ்டைல் செமி ஆட்டோமேட்டிக் ரைபிளை பயன்படுத்தியே மேத்யூ டிரம்பை சுட்டுள்ளான் என்று விசாரணையில் தெரிகிறது.

மேலும் அவனது காரில் சில வெடிகுண்டுகளையும் பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர்.

ஆனால் மேத்யூவின் டிரம்பை சுட்டதற்கு எந்த வலுவான காரணமும் இல்லை. எந்த சித்தாந்தத்தின் மீதும் மேத்யூ ஈடுபாடு காட்டவில்லை என்றும் தன்னிச்சையாகவே இந்த செயலில் ஈடுபட்டுள்ளான் என்றும் விசாரணையில் தெரியவருகிறது.

டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டையே மேத்யூ கொண்டிருந்தான் என்றும் தெரிகிறது.

Leave a comment

Type and hit enter