பாடசாலை மாணவர்களுக்கான இறுதி வாய்ப்பு!
பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
காலணிகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் நாளை, 5 ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான 6000 ரூபாய் கொடுப்பனவை நாளை (05.02.2025) வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் கொடுப்பனவில் உள்வாங்கப்படாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த உதவி திட்டங்கள் வழங்கப்படவுள்ளன.