OOSAI RADIO

Post

Share this post

பிறந்து 16 நாட்கள் ஆன குழந்தை உயிரிழப்பு!

யாழில் பிறந்து 16 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று கிருமித் தொற்றினால் உயிரிழந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனைகள் நேற்றையதினம்(18) இடம்பெற்ற நிலையில் கிருமித் தொற்றே மரணத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது.

இதன்போது, மின்சார நிலைய வீதி, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த நிரோராஜ் செல்வரதி என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை கடந்த 01 ஆம் திகதியன்று தெல்லிப்பழை வைத்தியசாலையில் பிறந்துள்ளது.

இந்நிலையில், குழந்தைக்கு தாயார் பாலூட்டிய வேளை குழந்தையால் பால் அருந்த முடியாததையடுத்து குழந்தைக்கு இரைப்பை குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்து தாயும் சேயும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, குழந்தை கடந்த 16 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளதுடன் குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

Leave a comment

Type and hit enter