OOSAI RADIO

Post

Share this post

செவ்வாய் பெயர்ச்சி – பணம் பெறும் ராசிகள்!

செவ்வாய் பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு 2024 அக்டோபர் 20ம் திகதி கடகத்தில் பெயர்ச்சியாக உள்ளார். இதன் காரணமாக சில ராசியை சேர்ந்தவர்களுக்கு நேர்மறையான விளைவுகளும், செல்வம் சேரவும் வாய்ப்புகள் அதிகரிக்க உள்ளன.

செவ்வாய் பகவான் கடக ராசியில் நீச நிலையில் அக்டோபர் மாதத்தில் சஞ்சரிக்க உள்ளார். இருப்பினும் இந்த நிலையால் எந்தெந்த ராசிக்கெல்லாம் அற்புத பலன்கள் கிடைக்கும் என நாம் இங்கு பார்ப்போம்.

கடக ராசி

கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு செவ்வாயின் நீச நிலையான சாதக பலனைத் தரக்கூடியதாகவே இருக்கும். இந்த காலத்தில் உங்களின் முதலீடுகள் மூலம் சிறப்பான லாபத்தைப் பெற்றிட முடியும். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கடின உழைப்பிற்கான பலனை அறுவடை செய்வீர்கள். உங்களின் நிதி நிலை முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. திருமண வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும்.

கன்னி ராசி

கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு செவ்வாயின் அமைப்பானது உங்களின் வருமானத்தை உயர்த்தக்கூடியதாக இருக்கும். உங்களின் தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வருமான வாய்ப்புகள் உண்டாகும். வீடு, மனை உள்ளிட்ட சொத்து வாங்கும் திட்டமிட்டுள்ளவர்களுக்கு அதை வாங்குவதற்கான சாதகமான சூழல் இருக்கும். முதலீடுகள் மூலம் லாபம் பெறலாம். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பண ஆதாயமடையலாம்.

மீன ராசி

மீன ராசிக்கு செவ்வாயின் அமைப்பானது பல வகையில் நன்மை தரக்கூடியதாக இருக்கும். பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் பெறலாம். குடும்பத்தில் தந்தையின் ஆதரவைப் பெறுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சியும், நிம்மதியும் அதிகரிக்கும். குடும்ப உறவுகள் சுமூகமாக இருக்கும். காதல் விவகாரத்தில் இணக்கமான சூழல் இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும் காலமாக இருக்கும்.

Leave a comment

Type and hit enter