இரவு அழைப்பார்கள் – தப்பான உறவு – அஜித்க்கு நோ சொல்லிட்டேன்!
கடந்த 2002 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை கிரண்.
இதையடுத்து இவர் வில்லன், வின்னர், அன்பே சிவம், அரசு, தென்னவன், ஆம்பள உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய கிரண், கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில், சமூக வலைத்தளங்களில் எனக்கு மூன்று முறை திருமணம், குழந்தைகள் இருக்கிறது என்று பல பொய்யான தகவ்களை பகிர்ந்து வருகின்றனர். ஜெமினி படத்தில் நடித்த பின் ஒரே நைட்டில் பிரபலம் ஆகிவிட்டேன்.
நான் காதலிக்கு சமயத்தில் அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் நடிக்க மறுத்துவிட்டேன். காரணம், திருமணம் செய்துவிட்டு சினிமாவில் இருந்து விலகலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் நான் தப்பான நபரை காதலித்துவிட்டேன் அவர் என்னை ஏமாற்றிவிட்டார்.
சினிமாவில் மீண்டும் நடிக்க வாய்ப்பு தேடிய போதுதான் கசப்பான அனுபவங்களை சந்தித்து இருக்கிறேன். நண்பர்களாக பழகியவர்கள் நைட் போன் செய்து அந்த விஷயத்துக்கு அழைப்பார்கள். இந்த மாதிரி கசப்பான அனுபவங்களை அதிகம் சந்தித்துவிட்டேன் என்று கிரண் கூறியுள்ளார்.