OOSAI RADIO

Post

Share this post

லெபனான் நடத்திய ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் கடந்த அக்டோபர் 7ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

பாலஸ்தீன காசா பகுதியில் வான் வழியாகவும், தரை வழியாகவும் இஸ்ரேலிய ராணுவப்படை கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதற்கிடையே, காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, இஸ்ரேல் வடக்குப் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தாக்கியதில் இஸ்ரேலில் வசித்து வந்த இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 இந்தியர்கள் இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளனர்.லெபனான் தாக்குதலில் பலியானவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த மேக்ஸ்வெல் (31) என்றும், இந்தத் தாக்குதலில் மேலும் 2 இந்தியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a comment

Type and hit enter