OOSAI RADIO

Post

Share this post

இலங்கையில் உடலுறவு பற்றிய சர்ச்சை!

22 வயதுக்குட்பட்ட ஒருவருடன் 14 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமியின் சம்மதத்துடன் உடலுறவு கொள்ளும் சிறுமிக்கு வழங்கப்படும் தண்டனையை குறைக்க முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என பல தரப்பினரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

குற்றவியல் சட்டத்தின் 19 வது அத்தியாயத்தை திருத்துவதற்கான மசோதா பெப்ரவரி 13 அன்று வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டது.

நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் உத்தரவின்படி, குற்றவியல் சட்டத்தின் 363 மற்றும் 364 ஐத் திருத்தியமைத்து வெளியிடப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட திருத்தத்தின்படி, 14 முதல் 16 வயதுக்குட்பட்ட பெண் குழந்தை தனது சம்மதத்துடன் 22 வயதுக்குட்பட்ட ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டால் தண்டனையை எளிதாக்க முன்மொழியப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நீதியமைச்சர் மற்றும் பாராளுமன்றத்திற்கு எழுத்து மூலம் உடன்படவில்லை என அறிவித்துள்ளது.

சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கு பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில், குற்றவியல் சட்டத்தின் 19 வது அத்தியாயத்தில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ள திருத்தங்களை உடனடியாக இடைநிறுத்துமாறு இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் நீதியமைச்சரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a comment

Type and hit enter