பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு!

அரசாங்கம் வரிச்சலுகை வழங்கினால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி அதிகரிப்பினால் பேக்கரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அரசாங்கம் சரியான வரிக் கொள்கையை பின்பற்றினால் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் எனவும் அகில இலங்கை பேக்கரி சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.