OOSAI RADIO

Post

Share this post

ஜனாதிபதிக்கு சென்ற கடிதம்!

பௌத்த மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம் அனுப்பிவைத்துள்ளனர்.

பௌத்த மதத்தை இழிவுப்படுத்தும் வகையிலான கருத்துகளை பரப்பி, பௌத்த தத்துவம் மற்றும் கலாச்சார விழுமியங்களுக்கு தீங்கு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கடிதம் ஒன்றின் மூலம் ஜனாதிபதியிடம் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக இலங்கையில் இடம்பெற்ற பல சம்பவங்களை அடிப்படையாக கொண்டே இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment

Type and hit enter