OOSAI RADIO

Post

Share this post

வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு அறிவுறுத்தல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெறுவதற்காக தமது கடவுச்சீட்டு மற்றும் பணத்தை ஒரு நிறுவனத்திடமோ அல்லது நபரொருவரிடமோ ஒப்படைப்பதில் அவதானமாக இருக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எச்சரித்துள்ளது.

எந்தவொரு நிறுவனத்திடமோ அல்லது நபரிடமோ தங்கள் கடவுச்சீட்டு அல்லது பணத்தை ஒப்படைப்பதற்கு முன், அவ்வாறான தரப்பினர்களின் உரிமம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கோரியுள்ளது.

அறிவிப்பில் மேலும், அவ்வாறான தரப்பினர்களின் உரிமம் மற்றும் அது சார்ந்த தகவல்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.

இதுதவிர 1989 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அது தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்திகொள்ள முடியும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக தெரிவித்து மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் கடந்த காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாக தெரிவித்து இடம்பெற்ற பண மோசடி சம்பவங்கள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a comment

Type and hit enter