OOSAI RADIO

Post

Share this post

மகன் மகளுடன் தாய் தற்கொலை!

சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் 28 வயதான தாய் மற்றும் இரு குழந்தைகள் தூக்கிட்டு இறந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தாய் இறப்பதற்கு முன்பு இரு குழந்தைகளையும் தூக்கிலிட்டு இருக்க வேண்டும் என காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.

பலோட் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஹேம்லதா சாஹு. இவரது கணவர் கட்டடத் தொழிலாளி. 4 வயது மகன் மற்றும் 2 வயது மகள் தம்பதிக்கு உள்ளனர். வெள்ளிக்கிழமை கணவர் பணிக்காக வெளியே சென்றுள்ளார்.

உடல்நிலை சரியில்லாத மாமியாரை மருத்துவமனையில் வைத்து கவனித்துக் கொள்ளும் மாமனார் வீட்டுக்கு திரும்பியபோது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டதைக் கவனித்துள்ளார்.

ஜன்னல் வழியாக பார்த்தபோது மருமகளும் குழந்தைகளும் வீட்டின் மேற்கூரையில் தூக்கிட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அருகில் உள்ளவர்களின் உதவியுடன் வீட்டுக்குள் நுழைந்தனர்.

தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Type and hit enter