OOSAI RADIO

Post

Share this post

இலங்கையில் ஆசிரியர் சேவை வெற்றிடங்கள்!

ஆசிரியர் சேவை யாப்பின் படி விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான பரீட்சை மார்ச் முதல் வாரத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மார்ச் மாத இறுதிக்குள் ஆட்சேர்ப்பு நடத்தப்படும் என்றார்.

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப 10 மாதங்கள் தாமதம் ஆகிறது. ஆட்சேர்ப்பை நிறுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு வாரங்களில் நீதிமன்ற தீர்ப்பு வந்தால், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியும். 20,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஆசிரியர்கள் சேவையை விட்டு வெளியேறி வெளிநாடு செல்வதனால் மாகாண மட்டத்தில் 13,500 வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆனால் ஆட்சேர்ப்பு தொடர்பாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தால் விரைவில் ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள முடியும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter