மகள்களை வெளுத்து வாங்கிய ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா சினிமாவில் இயக்குனர்களாக அவதாரம் எடுத்து பின் திருமணமும் செய்து கொண்டனர். இருவரின் வாழ்க்கையில் முதல் திருமணம் தோல்வியில் முடிந்து விவாகரத்தும் பெற்றனர். முதலில் செளந்தர்யா ரஜினிகாந்த் முதல் கணவரை விவாகரத்து செய்து பின் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
இந்த பிரச்சனை எல்லாம் முடிந்து படங்களில் கவனம் செலுத்தும் சமயத்தில் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை 18 வருடம் கழித்து விவாகரத்து செய்தார். இதனால் மன வேதனையில் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். அதேசமயம் ரஜினிகாந்தின் ஆசியுடன் விவாகரத்துக்கு பின் மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்தி லால் சலாம் படத்தினை இயக்கி வெளியிட்டும் இருக்கிறார்.
லால் சலாம் படத்தினை இயக்குவதற்கு முன் இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து உடற்பயிற்சி, யோகா, சைக்கிளிங் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஐஸ்வர்யா, தன் தங்கை செளந்தர்யாவின் கணவரை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டிருந்தார். தான் இயக்கும் பாலிவுட் படத்தில் செளந்தர்யாவின் கணவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்த பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறார். கணவர் சினிமாவில் நடிக்க துளிக்கூட விருப்பம் இல்லாத செளந்தர்யா, ஐஸ்வர்யாவிடம் அதுபற்றி பேசியிருக்கிறார்.
கணவரை ஐஸ்வர்யாவிடம் பேசவே வேண்டாம், சினிமாவில் நடிக்க கூடாது என்று உத்தரவும் போட்டிருக்கிறார் செளந்தர்யா. இதனால் குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட ரஜினிகாந்த் காதில் கூட செளந்தர்யா போட்டுள்ளார். இதனால் கோபத்தில் இரு மகள்களையும் அழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடினமாக கண்டித்து பேசியுள்ளாராம். அக்கா தங்கை வாழ்க்கையால் பெரியளவில் பாதிக்கப்பட்டது சூப்பர் ஸ்டார் தான்.
அவரின் மகள்களாக ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் பின் தான் ஐஸ்வர்யா, அந்த முடிவை விட்டுவிட்டு லால் சலாம் படத்தினை இயக்க திட்டமிட்டு அதில் தன் அப்பா ரஜினிகாந்தையும் நடிக்க வைத்திருக்கிறாராம். இதனை தொடர்ந்து நானும் அப்பாவை வைத்து இயக்கபோகிறேன் என்று அக்காவுக்கு போட்டியாக செளந்தர்யாவும் ஒரு படத்தினை இயக்கவிருக்கிறாராம்.