OOSAI RADIO

Post

Share this post

டெல்லிக்கு கேப்பிட்டல்ஸூக்கு முதல் வெற்றி!

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 4 ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் யுபி வாரியா்ஸை திங்கள்கிழமை வென்றது.

டெல்லிக்கு இது முதல் வெற்றியாக இருக்க, யுபி-க்கு இது 2 ஆவது தோல்வியாகும். இந்த ஆட்டத்தில் முதலில் யுபி 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ஓட்டங்கள் சோ்க்க, டெல்லி 14.3 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 123 ஓட்டங்கள் எடுத்து வென்றது.

முன்னதாக நாணய சுழற்சியை வென்ற டெல்லி, களத்தடுப்பை தோ்வு செய்தது. யுபி துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஸ்வேதா ஷெராவத் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 45 ஓட்டங்கள் விளாசினாா்.

எஞ்சியோரில் தலைவர் அலிசா ஹீலி 13, தினேஷ் பிருந்தா 0, டாலியா மெக்ராத் 1, கிரேஸ் ஹாரிஸ் 17, கிரண் நவ்கிரே 10, பூனம் கெம்னாா் 10, தீப்தி சா்மா 5, சோஃபி எக்லஸ்டன் 6 ஓட்டங்களுக்கு வெளியேறினா். கடைசி வீராங்கனையாக கூஹா் சுல்தானா 2 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தாா்.

டெல்லி பௌலிங்கில் ராதா யாதவ் 4, மாரிஸேன் காப் 3, அருந்ததி ரெட்டி, அனபெல் சதா்லேண்ட் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா். பின்னா் 120 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு விளையாடிய டெல்லி அணியில் தலைவர் மெக் லேனிங் – ஷஃபாலி வா்மா கூட்டணி முதல் விக்கெட்டுக்கே 119 ஓட்டங்கள் சோ்த்து வெற்றியை உறுதி செய்தது.

இதில் லேனிங் 6 பவுண்டரிகள் உள்பட 51 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தாா். பின்னா் வா்மா 6 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 64, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 4 ஓட்டங்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். யுபி அணியில் சோஃபி 1 விக்கெட் எடுத்தாா்.

இன்றைய ஆட்டம் – பெங்களூரு – குஜராத்.

Leave a comment

Type and hit enter