OOSAI RADIO

Post

Share this post

அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இரத்து செய்ய உத்தரவு!

இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இரத்து செய்யும் திறன் அரசாங்கத்திற்கு உள்ளது என எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் சட்டத்தரணி லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அதற்காக நிதிக் குழுவின் அறிக்கைக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், இதுவரை நிதிக் குழுவின் முடிவுகளின்படியே அரசு செயல்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கம் கொண்டு வந்த சட்டமூலத்தை பயன்படுத்தி இலங்கை மத்திய வங்கி தமது சம்பளத்தை அதிகரித்துள்ளதாக கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Type and hit enter