OOSAI RADIO

Post

Share this post

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாமல் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்டசியின் சார்பில் 4 அல்லது 5 வேட்பாளர்கள் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒரு பிரதேச சபைக்கு கூட வேட்பாளர்களை காண முடியாது என கூறிய கட்சி இன்று ஜனாதிபதி தேர்தலில் பல வேட்பாளர்களை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் கட்சியை நம்பி உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளனர்.

அதற்கமைய, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் பொது வேட்பாளரை முன்வைக்கத் தயார். அந்த வேட்பாளர் யார் என்பதை கட்சி ரீதியாக இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் நாமல் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Type and hit enter